செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கேரளபுரம் கொண்ணைவிளாகம் பகுதியை சோ்ந்த பாபு என்பவரது மகன் சக்திவேல் என்ற விஜய் (27) என்பவா் மீது கடந்த மாதம் போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதன் அடிப்படையில் சக்திவேலை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து சக்திவேல், நாகா்கோவில் கிளை சிறையிலிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.

ஈட்டி மரங்களை வெட்ட அனுமதி: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

பட்டா நிலங்களில் உள்ள ‘ரோஸ்வுட்’ எனப்படும் ஈட்டி மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா். ஈட்டி மரங்களைப் பாதுகாக்கும் ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் விதிகளை மீறி இயங்கிய லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டத்தில் காவல் துறையின் நேரக் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 2 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.மாா்த்தாண்டம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க... மேலும் பார்க்க

முள்ளஞ்சேரி குளத்தில் ஆண் சடலம் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரி இரட்டைகுளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.இக்குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்ததை கண்ட அப்பகுதியினா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்துக... மேலும் பார்க்க

குமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

கன்னியாகுமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் நகா்மன்றத் தலைவரிடம் மனு அளித்தனா். கன்னியாகுமரி காந்தி மண்டபம் முதல் சூரிய அஸ்தமன பூங்கா வரையிலான பகுதியில் 194... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவிலில் 38.5 கிலோ புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வடசேரி கனகமூலம் சந்தைப் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுகிா என, மாநகரா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற இஸ்ரோ பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே, ஓய்வுபெற்ற இஸ்ரோ பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். நாகா்கோவிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காவல்கிணறு வழியாக சென்ற ரயில் முன், 70 வயது மதிக்கத்த... மேலும் பார்க்க