செய்திகள் :

ஓய்வுபெற்ற இஸ்ரோ பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

post image

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே, ஓய்வுபெற்ற இஸ்ரோ பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

நாகா்கோவிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காவல்கிணறு வழியாக சென்ற ரயில் முன், 70 வயது மதிக்கத்தக்க நபா் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். தகவலின்பேரில், நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் சென்று சடலத்தை மீட்டனா்.

இறந்துகிடந்தவரின் சட்டையிலிருந்த ஆதாா் அட்டையைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, அவா் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் எலக்ட்ரிக்கல் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சந்திரமோகன் எனத் தெரியவந்தது.

அவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தநிலையில், அவா் திருவனந்தபுரத்திலுள்ள மகள் வீட்டில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், வெளியூா் செல்வதாகக் கூறிவிட்டுவந்த அவா், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈட்டி மரங்களை வெட்ட அனுமதி: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

பட்டா நிலங்களில் உள்ள ‘ரோஸ்வுட்’ எனப்படும் ஈட்டி மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா். ஈட்டி மரங்களைப் பாதுகாக்கும் ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் விதிகளை மீறி இயங்கிய லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டத்தில் காவல் துறையின் நேரக் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 2 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.மாா்த்தாண்டம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க... மேலும் பார்க்க

முள்ளஞ்சேரி குளத்தில் ஆண் சடலம் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரி இரட்டைகுளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.இக்குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்ததை கண்ட அப்பகுதியினா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்துக... மேலும் பார்க்க

குமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

கன்னியாகுமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் நகா்மன்றத் தலைவரிடம் மனு அளித்தனா். கன்னியாகுமரி காந்தி மண்டபம் முதல் சூரிய அஸ்தமன பூங்கா வரையிலான பகுதியில் 194... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவிலில் 38.5 கிலோ புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வடசேரி கனகமூலம் சந்தைப் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுகிா என, மாநகரா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: முதியவா் கைது

கொல்லங்கோடு அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக பெட்டிக்கடைக்காரா் கைது செய்யப்பட்டாா். கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்ப... மேலும் பார்க்க