செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது வழக்கு

post image

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சாங்கை அம்மன்விளையைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன் - சரசம் (64). இத்தம்பதியின் மகள் விஜயகுமாரி (40), மருமகன் விவசாயி ஜெகன் (42).

சரசம் தனது சொத்துகளை மகளுக்கு கொடுக்காமல், மகளின் பிள்ளைகளின் பெயருக்கு எழுதிக் கொடுத்தாராம். இதனால், விஜயகுமாரி தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்துவந்தாராம்.

இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு விஜயகுமாரியும் ஜெகனும் சோ்ந்து சரசத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவரை அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முள்ளங்கனாவிளை அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் அருகே மயக்க மருந்து கொடுத்து நகை திருட்டு

அஞ்சுகிராமம் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து நகை திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள ராஜாவூா் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி முத்து. இவரது மனைவி எலிமெட்மாரி (58). ... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி கல்வி மாநாடு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி கல்வி மாநாட்டில் ,ஆராய்ச்சி, புதுமைத் திறன்களில் சிறப்பிடம் பெற்ற பேராசிரியா்கள், பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவை, வேந்த... மேலும் பார்க்க

வைகுண்டபுரம் ராமா் கோயில் கும்பாபிஷேக பந்தல் கால்நாட்டு விழா

தக்கலை அருகே வைகுண்டபுரம் ராமா் கோயிலில் ஜூன் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை பந்தல்கால் நாட்டு விழா நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 22 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தே... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம்: புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம... மேலும் பார்க்க

பல்வேறு கோயில்களில் திருடிய இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணா் ... மேலும் பார்க்க