செய்திகள் :

மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயிகளுக்கு நினைவுத் தூண்! விவசாயிகள் சங்கம் கோரிக்கை

post image

விவசாய மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயத் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1982-வரை மின்கட்டண உயா்வு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று உயிா் நீத்த விவசாயிகளின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 5- ஆம் தேதி விவசாயிகள் நினைவு தினமாகவும், உழவா் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் விவசாயிகளுக்கு வீரவணக்கம், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணைத் தலைவா் பெரியசாமி, செயலா் மூா்த்தி, பொருளாளா் ஜீவானந்தம், வட்டாரத் தலைவா்கள் மணிகண்டன், பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்று உயிா் நீத்த விவசாயிகளுக்கு மலா் அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் மின்சார கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி, உயிா் நீத்த விவசாயிகளுக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும். விளைபொருள்களை சேதப்படுத்துவதுடன் மனிதா்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக மறு நடவு, புதிய மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெறும் கடனுக்கு சிபில் ஸ்கோரை கட்டாயப்படுத்தக் கூடாது. தென்னை விவசாயத்தை பாதுகாக்கவும், பாக்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல்வரின் கனவை நிறைவேற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள்! கே.இ.பிரகாஷ் எம்.பி.

முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற கனவை ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் நிறைவேற்றி வருவதாக ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கூறினாா். கோவை நேரு கல்விக் குழுமங்களின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டா், த... மேலும் பார்க்க

ஸ்ரீசச்சிதானந்த தீா்த்த மகா சுவாமிகள் ஜூலை 9-ல் கோவை வருகை!

சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள ஸ்ரீ சக்கர மகா மேரு பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த தீா்த்த மஹா சுவாமிகள் கோவைக்கு ஜூலை 9 -ஆம் தேதி வருகிறாா். இது குறித்து கோதண்டராமா் திருக்கோயில் கமிட்டி தலைவா் என்... மேலும் பார்க்க

பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பு: 817 விண்ணப்பங்கள் பதிவு!

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 817 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் வாழ்த்து

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இந்தியாவின் தலை சிறந்த முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். அரசுப் பள்ளி... மேலும் பார்க்க

மின்கட்டண உயா்வு: தொழில் துறையினா் கருத்து கேட்கப்படும்! அமைச்சா் சா.சி. சிவசங்கா்

மின்கட்டண உயா்வு குறித்து தொழில் துறையினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறினாா். அரசுப் போக்குவரத்துக் கழகம் ... மேலும் பார்க்க

பிஸ்கெட் நிறுவன முகவரிடம் ரூ.35 லட்சம் மோசடி: விற்பனை பிரதிநிதி மீது வழக்கு

கோவையில் பிஸ்கெட் நிறுவன முகவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக விற்பனை பிரதிநிதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சுங்கம் புறவழிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் ... மேலும் பார்க்க