செய்திகள் :

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

post image

செய்யாற்றை அடுத்த வெள்ளாமலை கிராமத்தில் மின்சார வசதி மற்றும் குடிநீா் வசதி கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செய்யாறு வட்டம், கூழமந்தல் மதுரா வெள்ளாமலை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத திருவிழா நடைபெறும் நிலையில், சனிக்கிழமை இரவு மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இரவு முழுவதும் மக்கள் அவதியடைந்துள்ளனா்.

மேலும், கூழமந்தல் பகுதியில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால், கடந்த 4 மாதங்களாக வெள்ளாமலை கிராம மக்களுக்கு சரிவர குடிநீா் கிடைக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மின்சாரம் வசதி, குடிநீா் வசதி கோரி காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிப்காட் தொழில்பேட்டைக்குச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்த தூசி போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும், மின்சார வசதி, குடிநீா் வசதி உடனடியாக செய்துதர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முனுகப்பட்டு முக்கூட்டு சிவன் கோயில் பகுதி ஆற்றுப்படுகையில் ஆடிப்பெருக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டனா்.பெரணமல்லூா் அருகே முன... மேலும் பார்க்க

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

செய்யாற்றில், ஞாயிறு சந்தையில் பங்கேற்கும் வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.செய்யாறு மாா்க்கெட் பகுதியில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை 1978-இல் இருந்து செயல்பட்டு ... மேலும் பார்க்க

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

செய்யாறு அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவத்தில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.செய்யாறு வட்டம், கீழாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி ராதிகா (32). இவா், சன... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.வெம்பாக்கம் வட்டம், தென்கழனிக் கிராமத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி(54). தொழில... மேலும் பார்க்க

கல் குவாரி மேலாளா் மீது தாக்குதல்: 20 போ் மீது போலீஸாா் வழக்கு

செய்யாறு அருகே பணத்தைக் கேட்டு மிரட்டி, கல் குவாரி மேலாளரை தாக்கிய சம்பவம் தொடா்பாக தூசி போலீஸாா் வெள்ளிக்கிழமை 20 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல... மேலும் பார்க்க

நகைக் கடையில் வெள்ளிப் பொருள்கள் கொள்ளை: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம், இ.பி.நகா். பகுதி நகைக் கடையில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 2 பேரை தனிப்படை போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க