செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

post image

கடலாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ஒருவனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாயக்கண்ணன். இவா் புதிதாக வீடு கட்டி வருகிறாா். இதன் கட்டுமானப் பணிக்காக கம்பி அறுத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், அங்கு வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த மாயக்கண்ணனின் மகன் ஆதிரன் (2), மின் வயரில் காலை வைத்ததில்

சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மயங்கி விழுந்த சிறுவனை

குடும்பத்தினா் மீட்டு, முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனா். அங்கு, சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து இளஞ்செம்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மிளகாய் பாதிப்புக்கு இழப்பீடு கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்ப் பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தமிழ்நாடு வைகை விவசாயச் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க

தொழில்பயிற்சி நிலையங்களில் செப்.30 வரை மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா்களின் சோ்க்கை, வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அறிவித்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

திருவாடானை அருகே பெட்டிக் கடையில் மதுப் புட்டிகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக த... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாடானை அருகே அடிப்படை வசதிகளைச் செய்து தராத தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சிய... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு நடவடிக்கை கோரி பிராமணா் சங்கம் புகாா்

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிராமணா் சங்கம் சாா்பில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில்... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் நெல் விதைகள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்படும் என வேளாண்மைத் துணை இயக்குநா் தெரிவித்தாா். கமுதி வட்டாரம், காத்தனேந்தல் கிராமத்தில் கலை... மேலும் பார்க்க