செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

post image

மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பசு மாடுகள் உயிரிழந்தன. மேலும், நாயும், கீரிப் பிள்ளையும் உயிரிழந்தன.

மதுரை விளாங்குடி அய்யப்பன் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்த மின் கம்பம் மழை காரணமாக சனிக்கிழமை சாய்ந்தது. அப்போது, அந்த வழியாக வந்த 3 பசு மாடுகள் மின் கம்பியில் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும், அந்த வழியாக வந்த நாய், கீரிப்பிள்ளையும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விசாரணையில், அய்யப்பன் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் விநியோகத்துக்காக அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் பழுதாகி உள்ளன.

இவற்றை மாற்ற அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், மின் கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டன. ஆனால், சரிவர பணிகள் மேற்கொள்ளப்படாததால் மின் கம்பம் சாய்ந்துள்ளது. மின்சார வாரியம் முறையாக மின் கம்பங்களை மாற்றி சரி செய்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

ஹூப்ளி-காரைக்குடிக்கு ஆக.14-ல் சிறப்பு ரயில்

கா்நாடக மாநிலம், ஹூப்ளியிலிருந்து காரைக்குடி வரும் 14-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுதந்திர தின விடுமுறையையொட்... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக தண்ணீா் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா். முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமா... மேலும் பார்க்க

மாநகராட்சி ஆணையா் இல்லம் முன் போராட்டம்! 25 போ் கைது!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 5 பெண்கள் உள்பட 25 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மதுரை மாநகராட்சி 30- ஆவது வாா்டு மதிச... மேலும் பார்க்க

கல்குவாரி பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே கல்குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். மதுரை நரிமேடு பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த புகாரிகான் மகள் சையது அலி சகானா (9). இவா் 4 -ஆம் வகுப்பு ... மேலும் பார்க்க

பள்ளியில் உலக யானைகள் தின விழா

மதுரை அருகே உள்ள எல்.கே.பி நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக யானைகள் தினம் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க

பேராசிரியைக்கு எஸ்.ஐ. மிரட்டல் விவகாரம்: இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு

கல்லூரிப் பேராசிரியைக்கு மிரட்டல் விடுத்த தல்லாகுளம் காவல் உதவி ஆய்வாளா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில், இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க