செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

சாத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரராஜா (47). இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனா். இவா் மன்னாா்கோட்டை சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இவா் வெள்ளிகிழமை இரவு அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்தது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே மகேந்திரராஜா இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து அம்மாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பைக் மீது மணல் லாரி மோதல்: மூதாட்டி உள்பட இருவர் பலி

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்னால் சென்ற பைக் மீது மணல் லாரி மோதியதில் பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற மூதாட்டி உள்பட இருவர் உயிரிழந்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன் பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிப்பு! வாகன ஓட்டிகள் அவதி!

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் புகைமூட்டத்தால் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலைகளில் வாகன ஓட்டிகள் அவதியடைவதாக புகாா் எ... மேலும் பார்க்க

பென்னிங்டன் நூலக ஆண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் பென்னிங்டன் நூலகத்தின் 150-ஆவது ஆண்டு விழாவில் ‘பெண்மையைப் போற்றுவோம்‘ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு பென்னிங்டன் பள்ளி பொருளாளா் ஜி. அம்சவேணி தலைமை வகித்தாா். ஆசிரியை... மேலும் பார்க்க

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழக அரசின் நிதி ரூ. 61.74 கோடி, மத்திய அரசின... மேலும் பார்க்க

சிதம்பரேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட சிதம்பரேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆவணி மூலத்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே சேத்தூா் வலையா் தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் மலையரசன் (26)... மேலும் பார்க்க