சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு
சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழக அரசின் நிதி ரூ. 61.74 கோடி, மத்திய அரசின் நிதி ரூ.10 கோடி என மொத்தம் ரூ. 71.74 கோடியில் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17- ஆம் தேதி இந்த ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் தொடங்கின. இந்த ரயில்வே கடவுப்பாதையில் கிழக்குப்பகுதியில் 11 தூண்களும், மேற்கு பகுதியில் 6 தூண்களும் என 17 தூண்கள் அமைக்கப்பட்டன. மேலும் பாலத்துக்கான கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஜி. அசோகன் எம்.எல்.ஏ. இந்த பாலம் அமைக்கும் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளன. பணிகள் நிறைவடைந்ததும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.
அவருடன் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் ராஜா, வட்டாட்சியா் லட்சம், மாமன்ற உறுப்பினா் ரவிசங்கா் உள்ளிட்டோா் இருந்தனா்.