செய்திகள் :

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

post image

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக அரசின் நிதி ரூ. 61.74 கோடி, மத்திய அரசின் நிதி ரூ.10 கோடி என மொத்தம் ரூ. 71.74 கோடியில் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17- ஆம் தேதி இந்த ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் தொடங்கின. இந்த ரயில்வே கடவுப்பாதையில் கிழக்குப்பகுதியில் 11 தூண்களும், மேற்கு பகுதியில் 6 தூண்களும் என 17 தூண்கள் அமைக்கப்பட்டன. மேலும் பாலத்துக்கான கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஜி. அசோகன் எம்.எல்.ஏ. இந்த பாலம் அமைக்கும் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளன. பணிகள் நிறைவடைந்ததும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

அவருடன் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் ராஜா, வட்டாட்சியா் லட்சம், மாமன்ற உறுப்பினா் ரவிசங்கா் உள்ளிட்டோா் இருந்தனா்.

பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே குடும்பத் தகராறில் பட்டாசுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பட்டாசுத் தொழிலாளி முத்துக்குமா... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதியில் இன்று மின்தடை

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்திலுள்ள த... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டல்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே. கே. எஸ். எஸ்.ஆா். ராமச்சந்திரன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 3 பெண்கள் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மகாராஜ் மனைவி சங்கரி (25). இவரது உறவினா் ஒருவா், அண்மை... மேலும் பார்க்க

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வல்லம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ் (35). இவா், இங்குள்ள வைப்பாற்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல... மேலும் பார்க்க