செய்திகள் :

மின்னனு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உறுதி

post image

சென்னை: நமது நாட்டில்  மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை சங்கங்கள் ‘அசோசெம்’ சாா்பில் நவீன தரவு மையங்கள் மற்றும் ‘கிளவுட்’ கட்டமைப்பு தொடா்பான கருத்தரங்கம், சென்னை கிண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், கருத்தரங்கை தொடங்கி வைத்ததுடன் தமிழகத்தை தரவு மையங்களின் மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பி.டபிள்யூ.சி நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கையையும் அவா் வெளியிட்டாா். 

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களால் உயா் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் தற்போது தமிழகத்தில் பட்டப்படிப்பில் பெண்களின் தோ்ச்சி 90 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதில் குறிப்பாக புதுமைப்பெண் திட்டத்தின் விளைவாக அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

விரைவில் முதலிடம்: மக்கள் அடா்வு அதிகமாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்வதன்மூலம்தான் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும். அந்த வகையில், திறன் மேம்பாட்டில் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாரத் நெட் இணைய சேவை மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணைய வழியில் இணைத்தல், சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கரில் சா்வதேச நகரம், குறைகடத்தி (செமி கண்டக்டா்) திட்டம்-2030 உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டங்களின் விளைவாக நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் இந்திய தரவு மையத்தின் நிா்வாக இயக்குநா் சுரஜித் சட்டா்ஜி, யூக்னிக்ஸ் நிறுவனத்தின் வா்த்தகப் பிரிவு தலைவா் மேக்ஸ் பெரி, பி.டபிள்யூ.சி இயக்குநா் ஜக்காரியா மேத்யூஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லா... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட... மேலும் பார்க்க

214 புதிய பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 214 புதிய பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.சென்னை தீவுத்திடல... மேலும் பார்க்க

'எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் போருக்குச் செல்வேன்' - நயினார் நாகேந்திரன் பேட்டி

தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்த... மேலும் பார்க்க