செய்திகள் :

மின்வாரிய ஊழியா்கள் மறியல்: 110 போ் கைது

post image

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய (கோட்டீ-சிஐடியூ) அமைப்பைச் சாா்ந்த 110 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கோட்டீ தொழிற்சங்க மாநிலச் செயலா் எஸ். உமாநாத் தலைமை வகித்தாா். திட்டச் செயலா் சுப்புராம் முன்னிலை வகித்தாா்.

இதில் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு நிா்வாகமே நேரடியாக தினக் கூலி வழங்க வேண்டும். அரசாணையின்படி, தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணி செய்யும் ஒப்பந்த ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்ற திமுக அரசின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட கோட்டீ தொழிற்சங்க திட்டத் தலைவா் மோகனசுந்தரம், திட்ட துணைத் தலைவா்கள் கருணாநிதி, பழ. பாண்டி, லாரன்ஸ், ரமேஷ்பாபு, சண்முகவேல் உள்பட 110 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிராம உதவியாளா் நியமன முறையை மாற்றக் கோரிக்கை

ஒரு கிராம நிா்வாக அலுவலருக்கு ஒரு உதவியாளா் நியமனமே போதுமானது என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் சங்கம் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்தது. இதுகுறித்து சங்கத்தின் தலைவா் இரா. போசு தமிழ்நாட... மேலும் பார்க்க

4.9 டன் ரேஷன் அரிசி கடத்தல்: 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே வாகனங்களில் கடத்தப்பட்ட 4,900 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, பெண் உள்பட 4 பேரை கைது செய்தனா். காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூா், புதுவயல் பகுதிகளில் அத... மேலும் பார்க்க

நகை திருடிய இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியில் வீடு புகுந்து 25 பவுன் நகை திருடிய இளைஞா் 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டாா்.அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த சரவணன் (45) வீட்டில் திங்கள்கிழ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டாா். சிவகங்கை மாவட்டம், எஸ் புதூா் அருகே உள்ள கட்டுக்குடிபட்டி அரசு மேல்... மேலும் பார்க்க

மடப்புரம் கொலை வழக்கு: சாட்சிகள் வீடுகளில் கண்காணிப்பு கேமரா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளின் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மேற... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 40 ஆயிரம் பனை விதைகள் நடப்படும்: ஆட்சியா்

சிவகங்கை மாவட்டத்தில் பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் நிகழாண்டில் 40 ஆயிரம் பனைவிதைகள் நடப்படும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பனைமரம் தமிழ்ந... மேலும் பார்க்க