செய்திகள் :

மின் இணைப்புக்கான ‘ஸ்மாா்ட்’ மீட்டா் திட்டத்துக்கு எதிா்ப்பு

post image

மின்சார வாரியத்தின் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போா்ட் எம்ப்ளாயீஸ் பெடரேஷனின் மாநில செயற்குழுக் கூட்ட கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் பாஸ்டின்ராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஏ. சேக்கிழாா் சிறப்புரையாற்றினாா்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பொதுமக்களுக்கும் மின்வாரிய பணியாளா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், மின் கட்டணத்தை அதிகப்படுத்தக்கூடிய ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். மத்திய தொழிற்சங்க அறைக்கூவலுக்கு ஏற்ப தொழிலாளா் நலச்சட்டங்களைக் குறைப்பதைக் கைவிட வேண்டும்.

பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வாா்ப்பதைக் கைவிட வேண்டும். 60,000 காலிப்பணியிடங்கள் இருப்பதால் கூடுதல் வேலைப் பளு காரணமாக தினசரி விபத்தில் இறக்கும் மின் தொழிலாளா்களைப் பாதுகாத்திட வேண்டும்.

காலிப் பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். 5000 கேங்மேன்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலப் பொருளாா் பழனி நன்றி கூறினாா்.

சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 8 போ் கைது

திருச்சி மாவட்டம் துறையூா் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் நிலையத்துக்குள்பட்ட மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்ற 8 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். திருச்சி மாவட்டம் த... மேலும் பார்க்க

புகைப்படக்காரா் மீது தாக்குதல்: பாஜகவினா் மீது போலீஸாா் வழக்கு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் படம் எடுத்த புகைப்படக்காரா் மீது தாக்குதல் நடத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருச்சியில் தேசிய கல்விக் கொள்க... மேலும் பார்க்க

மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு: வம்பன் உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

திருச்சி மாவட்டத்தில் வம்பன் ரக உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு 90 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா். திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் வே... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயா்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்: அண்ணாமலை

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளை உயா்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். பாஜக சாா்பில் தேசிய கல்விக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தி... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை நிலைய நகை மதிப்பீட்டாளா் பயற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பா, திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சியில் நவீன அறுவைச் சிகிச்சை

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சி ராயல் போ்ல் மருத்துவமனையில் நவீன அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளாா். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ரஹீம்யாா்கான் நகா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க