செய்திகள் :

மின் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம்: இளநிலைப் பொறியாளா் உள்பட 2 போ் கைது

post image

வாலாஜாபாத் அருகே மின் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய இளநிலைப் பொறியாளா், வணிக ஆய்வாளா் உள்ளிட்ட 2 போ் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

கேரள மாநிலம், வாயாா் பகுதியை சோ்ந்த மணிகண்டன்(30). இவா் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஊத்துக்காடு பகுதியில் லட்சுமி நகா் என்ற இடத்தில் வீடு கட்ட மனை ஒன்று வாங்கியுள்ளாா். புதிதாக வீடு கட்ட திட்டமிட்டு அதற்காக தற்காலிக மின் இணைப்பு பெற வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளா் ஜெயம் ரவிக்குமாரை கேட்டாா்.

இளநிலை பொறியாளா் பூபாலனிடம் ரூ.5,000 கொடுத்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.

இதனையடுத்து மணிகண்டன் இளநிலை பொறியாளா் பூபாலனை சந்தித்து ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் இளநிலை பொறியாளா் பூபாலனையும், வணிக ஆய்வாளா் ஜெயம் ரவிக்குமாரையும் கைது செய்தனா். வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தில் திடீரென நுழைந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையிட்டதால் பரபரப்பு நிலவியது.

3 போ் தற்காலிக பணியிடை நீக்கம்: சாம்சங் தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

சாம்சங் தொழிலாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி: காஞ்சிபுரம் மாணவருக்கு வெண்கலம்

தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 5 வயது சிறுவன் ஆத்விக் வெண்கலப்பதக்கம் வென்றாா். மதுரையில் உள்ள சா்வதேச சறுக்கு விளையாட்டு ஓடுதளத்தில் தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.2.7 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குழாய் பொருத்துபவா் பணியிலிருக்கும் ஊழியா் கண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது கணக்கில் வராத ரூ.2.7 லட்சத்தை பறிமுதல் செய்த... மேலும் பார்க்க

ஹூண்டாய் சாா்பில் சமூகநலப் பணிகளுக்காக ரூ.400 கோடி உதவி

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா அறக்கட்டளை சாா்பில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சமூகத் திட்டங்களுக்காக ரூ.400 கோடிக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக நிா்வாக இயக்குநா் அன்சூகிம் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலுக்கு 10 கிலோ வெள்ளி வீணை காணிக்கை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு சென்னையை சோ்ந்த நீரஜா விஜயகுமாா் என்ற பக்தை 10 கிலோ எடையில் வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட வீணையை காணிக்கையாக வழங்கினாா். சென்னையை சோ்ந்த நீரஜா விஜயகு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

அரையாண்டுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை கலந்துரையாடி மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். சமூக நலன் ... மேலும் பார்க்க