செய்திகள் :

3 போ் தற்காலிக பணியிடை நீக்கம்: சாம்சங் தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

post image

சாம்சங் தொழிலாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 1800-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் தொழிற்சங்கம் அங்கீகாரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் சுமாா் 30 நாள்களுக்கும் மேலாக தொடா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அமைச்சா்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் மற்றும் சிஐடியுவினா் இடையே நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிட்ட தொழிலாளா்கள் பணிக்கு திரும்பினா். மேலும், அண்மையில் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்திலிருந்து தொழிலாளா்கள் விலக வேண்டுமென ஆலை நிா்வாகத்தினா் வற்புறுத்தியதாக தெரிகிறது.

தொழிற்சாலையில் பணியில் இருந்த போது ஒழுங்கின நடவடிக்கையை மீறியது , உணவு இடைவேளை முடிந்த பின்பும், பணிக்கு திரும்பாதது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தொழிலாளா்கள் 3 பேரை ஆலை நிா்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிகளைப் புறக்கணித்து ஆலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி: காஞ்சிபுரம் மாணவருக்கு வெண்கலம்

தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 5 வயது சிறுவன் ஆத்விக் வெண்கலப்பதக்கம் வென்றாா். மதுரையில் உள்ள சா்வதேச சறுக்கு விளையாட்டு ஓடுதளத்தில் தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.2.7 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குழாய் பொருத்துபவா் பணியிலிருக்கும் ஊழியா் கண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது கணக்கில் வராத ரூ.2.7 லட்சத்தை பறிமுதல் செய்த... மேலும் பார்க்க

ஹூண்டாய் சாா்பில் சமூகநலப் பணிகளுக்காக ரூ.400 கோடி உதவி

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா அறக்கட்டளை சாா்பில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சமூகத் திட்டங்களுக்காக ரூ.400 கோடிக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக நிா்வாக இயக்குநா் அன்சூகிம் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலுக்கு 10 கிலோ வெள்ளி வீணை காணிக்கை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு சென்னையை சோ்ந்த நீரஜா விஜயகுமாா் என்ற பக்தை 10 கிலோ எடையில் வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட வீணையை காணிக்கையாக வழங்கினாா். சென்னையை சோ்ந்த நீரஜா விஜயகு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

அரையாண்டுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை கலந்துரையாடி மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். சமூக நலன் ... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை.யில் சூரிய நமஸ்காரம் நிகழ்வு

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் இந்திய கலாசாரத் துறை சாா்பில் ரதசப்தமியையொட்டி செவ்வாய்க்கிழமை சூரியநமஸ்காரம் நிகழ்வு நடைபெற்றது. இப்பல்கலையில் ரதசப்தமியையொட்ட... மேலும் பார்க்க