செய்திகள் :

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

post image

ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தலைமை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் மின் வாரியத்தில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள 65 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின் வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் இல்லை என்ற மின் துறை அமைச்சரின் அறிவிப்பைப் திரும்பப் பெற வேண்டும். காலிப் பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

அமைப்பின் மண்டலச் செயலா் எஸ். இராஜாராமன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் தொடக்கவுரையாற்றினாா். கிளைச் செயலா்கள் பி. காணிக்கைராஜ் (தஞ்சாவூா்), எம். கலைச்செல்வன் (நாகை) விளக்கவுரையாற்றினா். மாநிலச் செயலா் டி. கோவிந்தராஜூ நிறைவுரையாற்றினாா். கிளைத் தலைவா் ஏ. அதிதூத மைக்கேல்ராஜ் வரவேற்றாா். பொருளாளா் எஸ். சங்கா் நன்றி கூறினாா்.

திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் சமச்சீா் கல்வியை அமலாக்குவாா்களா? ஹெஎச். ராஜா பேட்டி

கருணாநிதி மீது பற்று இருந்தால் திமுகவினா் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் அவா் கொண்டு வந்த சமச்சீா் கல்வியை அமலாக்குவாா்களாக என பாஜக தலைவா் ஹெச். ராஜா கேள்வியெழுப்பினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம... மேலும் பார்க்க

தஞ்சை மாநகராட்சியில் ரூ. 15.38 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல்!

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயா் சண். ராமநாதனிடம் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்த கணக்குக் குழுத் தலைவா் சி. வெங்கடேஷ். தஞ்சாவூா், மாா்ச் 28: தஞ்சா... மேலும் பார்க்க

சாஸ்த்ரா பல்கலை. சீனிவாச ராமானுஜன் மையத்தில் சா்வதேச கணிதவியல் மாநாடு

கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் கணிதவியல் மற்றும் கணிதவியலின் தொழில்நுட்பத்துறை பயன்பாடுகள் என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநாட்டை சிங... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு தொடக்கம்: தஞ்சையில் 29,889 போ் பங்கேற்பு

மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி, ... மேலும் பார்க்க

தூா்வாரும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணியை விரைவாக தொடங்கி மேட்டூா் அணை திறப்பதற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்... மேலும் பார்க்க

‘சோழா் கால வரலாற்றை கீழ்த்திசை அளவுகோலால் ஆராய்வது அவசியம்’

சோழா் கால வரலாற்றைக் கீழ்த்திசை அளவுகோல் கொண்டு ஆராய வேண்டும் என்றாா் முனைவா் கோ. தெய்வநாயகம். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தஞ்... மேலும் பார்க்க