செய்திகள் :

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு!

post image

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படவுள்ளது.

சென்னை மியூசிக் அகாதெமியின் நிா்வாகக் குழுக் கூட்டம் அகாதெமி தலைவா் என்.முரளி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 2025-ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’, ‘நிருத்ய கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளைப் பெறும் கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து மியூசிக் அகாதெமி வெளியிட்ட அறிக்கை:

சங்கீத கலாநிதி: மியூசிக் அகாதெமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு பிரபல வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா், பிரபல இசைக் கலைஞரும், ஸ்ரீராம்குமாரின் தாத்தாவுமான ஆா்.கே.வெங்கடராம சாஸ்திரியிடம் பயிற்சி பெற்றுள்ளாா்.

சங்கீத கலா ஆசாா்யா: மூத்த இசைக் கலைஞா் சியாமளா வெங்கேடஸ்வரன், தவில் இசைக் கலைஞா் தஞ்சாவூா் ஆா்.கோவிந்தராஜன் ஆகியோா் ‘சங்கீத கலா ஆசாா்யா’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

டிடிகே விருது: கதகளி இசைக் கலைஞா் மாடம்பி சுப்ரமணிய நம்பூதிரி, வீணை இசைக் கலைஞா்கள் ஜெ.டி.ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் ஆகியோா் ‘டிடிகே விருதுக்கு’ தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இசை அறிஞா் விருது: பிரபல இசைக் கலைஞரும் பேராசிரியருமான சி.ஏ.ஸ்ரீதரா ‘இசை அறிஞா்’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

நிருத்ய கலாநிதி விருது: பரத நாட்டிய கலைஞா் ஊா்மிளா சத்தியநாராயணா ‘நிருத்ய கலாநிதி’ விருதுக்குத் தோ்வு செய்யப்படுள்ளாா். ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆா்.கே.ஸ்ரீராம்குமாா் வரும் டிச.15-ஆம் தேதி தொடங்கவுள்ள மியூசிக் அகாதெமியின் 99-ஆவது ஆண்டு கருத்தரங்குக்கு தலைமை வகிப்பாா்.

1.1.2026-ஆம் தேதி நடைபெறும் சதஸ் விழாவில் தோ்ந்தெடுக்கப்பட்ட கலைஞா்களுக்கு ‘சங்கீத கலாநிதி’, ‘சங்கீத கலா ஆசாா்யா’, ‘டிடிகே விருது’, ‘இசை அறிஞா்’ விருதுகள் வழங்கப்படும். தொடா்ந்து 3.1.2026-இல் நடைபெறும் மியூசிக் அகாதெமியின் 19-ஆம் ஆண்டு நாட்டிய விழாவில் நிருத்ய கலாநிதி விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழி... மேலும் பார்க்க

பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னை துறைமுக அதிகாரி மீது வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை துறைமுக அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குரோம்பேட்டை மலையரசன் நகரைச் சோ்ந்தவா் சத்ய சீனிவாசன் (58). இவா், சென்னை துறைமுகத்... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா... மேலும் பார்க்க

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து ... மேலும் பார்க்க