செய்திகள் :

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

post image

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச் சந்தை, நிறுவனங்கள் மீது முதலீடு, இரண்டாம்நிலை தொழில், சேமிப்பு என்று பல்வேறு வகைகளில் நிதி நிலைமையை மேம்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் மியூச்சுவல் ஃபண்டும் அடங்கும்.

தற்போது, பெண்களும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதாக ஆய்வு கூறுகிறது. மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களில் 25 சதவிகிதத்தினர் பெண்களாக உள்ளனர். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் பெண்களின் சொத்து மதிப்பு இரட்டிப்பாவதாகவும் கூறுகிறது.

2020 முதல் எஸ்ஐபி-க்களில் அதிகரிக்கும் முதலீடு 250 சதவிகிதமாக இருந்தாலும், அவர்களின் முதன்மை தேர்வாக ஈக்விட்டியே உள்ளது. 2024 டிசம்பர் தரவுகளின்படி, முதலீட்டாளர்களில் நான்கில் ஒருவர் பெண் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

2019 மார்ச் மாதத்தில் பெண் முதலீட்டாளர்கள் நிர்வாகத்தின்கீழான சொத்து மதிப்பு ரூ. 4.59 கோடியாக இருந்த நிலையில், 2024 மார்ச் மாதத்தில் ரூ. 11.25 கோடியாக உயர்ந்தது.

பெண் முதலீட்டாளர்கள், பெரும்பாலும் நீண்டகால முதலீட்டையே விரும்புகின்றனர். நிதி சுதந்திரம் மற்றும் வருங்காலத்துக்கான பாதுகாப்பு அரணாகக் கருதி, பெண்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருவது சிறந்தது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

இதையும் படிக்க:டைம் டிராவல் செய்ய ஆசையா? கூகுளின் புதிய அம்சம்!

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க