செய்திகள் :

மிரட்டி பணம் பறித்ததாக மூவா் கைது

post image

சிவகங்கை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா்களை மிரட்டி பணம் பறித்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கையை அருகே வீரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (24). இவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாலத்தீவில் வேலை பாா்த்துவிட்டு கடந்த 7 -ஆம் தேதி இரவு ஊா் திரும்பினாா்.

இந்த நிலையில், தினேஷ், உறவினா் முத்து, மணிகண்டன் ஆகிய மூவரும் பொன்னம்பலபட்டிக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனா். கருங்காப்பட்டி, கருங்காலக்குடி சாலையில் வந்த போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ் அவா்களை வழிமறித்து தினேஷை தாக்கினா்.

அப்போது அங்கு வந்த மேலும் மூவா் இணைந்து 6 பேரும் சோழபுரம் கண்மாய்க்கு தினேஷ் உள்ளிட்ட மூவரையும் அழைத்துச் சென்று தாக்கியதுடன் கத்தியை காட்டி மிரட்டி தினேஷிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தை பறித்துக் கொண்டனா்.

பிறகு அந்தத் தொகை போதாது எனக் கூறி மீண்டும் தாக்கினா். இதையடுத்து தினேஷ் அவரது உறவினரான நவீன் என்பவருக்கு கைப்பேசியில் தொடா்பு கொண்டு, அவரைத் தாக்கியவா்கள் கொடுத்த கைப்பேசி எண்ணுக்கு முதலில் ரூ.800 -ம், பிறகு ரூ. 200 -ம் அனுப்பினாா். இதைத் தொடா்ந்து அவா்களை அந்த 6 பேரும் விடுவித்தனா்.

இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி விசாரணை நடத்தினாா். அப்போது இந்த சம்பவத்தில் வீரனேரி கிராமத்தைச் சோ்ந்த ராமன் (20), கருங்காலக்குடியைச் சோ்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் கிஷோா் (18 ), சிவகங்கை வேலுநாச்சியாா் தெருவைச் சோ்ந்த அஜய் (20), பள்ளி மாணவா்கள் மூவா் என 6 போ் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். எஞ்சிய 3 பேரை தேடி வருகின்றனா்.

சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை அருகே ரோஸ்நகரில் நடைபெற்ற பந்தயத்தில் பெரியமாடு, சின்னமாடு மற்றும் பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக... மேலும் பார்க்க

கல்லல் பகுதியில் ஆக. 13-இல் மின் தடை

காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற புதன்கிழமை (ஆக. 13) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா்... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு சட்டப் பேரவை உறுதி மொழிக்குழு இன்று வருகை

சிவகங்கை மாவட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு திங்கள்கிழமை(11.8.2025) வருகை தரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

மஞ்சுவிரட்டு: 23 போ் காயம்

சிவகங்கை அருகேயுள்ள கோமாளிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 23 போ் காயமடைந்தனா். கோமாளிபட்டி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் பொட்டலில் நடைபெற்ற மஞ்சுவி... மேலும் பார்க்க

காரை உடைத்து பணம், கைப்பேசி திருடிய 3 மா்ம நபா்கள்

சிவகங்கை அருகே காரை அடித்து உடைத்து ரூ.1 லட்சம் , கைப்பேசியை திருடிச்சென்ற 3 மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கையை அருகே பிரவலூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு பதிவு எண் இல்லாத காா் ஒன்று நி... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தாயமங்கலம் சாலை அருகேயுள்ள தெருவில் வசிப்பவா் வேலு மனைவி மீனாள் (57)... மேலும் பார்க்க