செய்திகள் :

மீண்டும் தலைத்தூக்கும் கரோனா? சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிகரிக்கும் பாதிப்புகள்!

post image

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகின்றன.

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், சீனா மற்றும் தாய்லாந்திலும் புதியதாக கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹாங்காங் நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் கரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டில், கடந்த மார்ச் மாதம் 1.7 சதவிகிதமாக இருந்த கரோனா தொற்றின் பரவல் தற்போது 11.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவான உச்சக்கட்ட பாதிப்புகளைவிட அதிகமென மத்திய சுகாதாரப் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும் மாதிரிகளில் தொற்று உறுதியாவது தற்போது உச்சத்தை அடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் சுமார் ஓராண்டு கழித்து முதல்முறையாக கரோனா பாதிப்பு குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தொற்றுக்கள், ஒரே வாரத்தில் சுமார் 28 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும்; இதன்மூலம், 14,200 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது எனக் கணக்கிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாள்தோறும் கரோனா பாதிப்பினால் சிங்கப்பூரின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், உள்ளூரில் பரவும் கரோனா வைரஸானது, முந்தைய வைரஸைவிட வேகமாகப் பரவி, கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், மீண்டும் பரவும் கரோனா பாதிப்பானது குறைந்த எதிர்ப்பு சக்தியினால் மட்டுமே ஏற்படுவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குல்: காஸாவில் 20 பேர் பலி! டிரம்ப் பயணம் மாற்றத்தை ஏற்படுத்துமா?

இந்தோனேசியா: மோதலில் 20 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பதற்றம் நிறைந்த பப்புவா பகுதியில் கிளா்ச்சியாளா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 கிளா்ச்சியாளா்கள், இரண்டு காவலா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள்... மேலும் பார்க்க

‘பட்டினிச் சாவு அபாயத்தில் 30 கோடி போ்’

உலகளவில் 29.53 போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சா்வதேச உணவுப் பற்றாக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல: டிரம்ப்

அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ‘இவ்விரு நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க நான் மத்தியஸ்தம் செய்தே... மேலும் பார்க்க

சமூக வலைதள ‘போலி செய்தியை’ நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சா்!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து கட்டுரை வெளியானதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் கூறியத... மேலும் பார்க்க

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இன்று(மே 16) பேசியிருக்கிறார்.பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான மே ... மேலும் பார்க்க