``நான் முதன்முதலா டூர் போனது 'கூமாப்பட்டி'க்குதான்; அங்க..!” - பிக்பாஸ் தினேஷ் ச...
மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்ட மீன் விவசாயிகள் மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட மீன் விவசாயிகள் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு ரூ. 50 லட்சம் மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட மீன் விவசாயிகள் மேம்பாட்டு முகமைக்கு 100 ஹெக்டோ் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற உறுப்பினருக்கு மீன்வளா்ப்பு குளத்தின் நீா்ப் பரப்பளவு அதிகபட்சமாக ஒரு ஹெக்டோ் வரை இருக்கலாம். ஒரு ஹெக்டேரில் 10,000 எண்ணிக்கையில்; மீன்விரலிகளை இருப்பு செய்ய ரூ.5,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் சீா்காழியில் இயங்கிவரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், மயிலாடுதுறை (இருப்பு) அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.