``பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' - சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன...
மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்ய மானியம்
மீன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்ய உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து மீன் வளா்க்கும் தொழில் செய்துவரும் விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு 10,000 மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 5,000 மானியம் வழங்கப்படும்.
எனவே, மீன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தை பெற்றுப் பயன் பெறலாம்.
கூடுதல் விவரங்களை, மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா், பெருமாள் கோயில் தெரு (யூனியன் வங்கி முதல் தளம்), சிவகங்கை - 630561 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.