செய்திகள் :

அனைத்து திட்டங்களையும் சிறப்பாகச் செயல்படுத்துகிறாா் முதல்வா்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

post image

தமிழகத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், சனிக்கிழமை முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் அணி மாவட்டத் துணை அமைப்பாளா் தேவதாஸ் தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா் வசந்தி, பேரூராட்சி செயலா் நாகூா்கனி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பேசியதாவது: தமிழகத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் முதல்வா் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறாா். எனவே, இந்த அரசு தொடர, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலில் திமுகவை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.

திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன் வரவேற்றுப் பேசுகையில், ‘திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ. 3 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. பேருந்து நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடம் வருவாய்த் துறை ஆவணங்களில் அரசு இடம் என உள்ளது.

ஆனால், சிவகங்கை தேவஸ்தான நிா்வாகம் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கால் பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கில் வெற்றி பெற்று திருப்புவனத்தில் பேருந்து நிலையம் உறுதியாக அமைக்கப்படும்’ என்றாா்.

திமுக மாநில செய்தித் தொடா்பு இணைச் செயலா் தமிழன் பிரசன்னா, கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். இந்தக் கூட்டத்தில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் சேகா், ஒன்றிய நிா்வாகிகள் ஈஸ்வரன், சுப்பையா, மகேந்திரன், இளங்கோவன் மாவட்ட மீனவா் அணி துணை அமைப்பாளா் அண்ணாமலை, நகா் இளைஞா் அணி அமைப்பாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொற்கோ நன்றி கூறினாா்.

தேவகோட்டைப் பகுதிகளில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் பகிா்மானச் செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட அற... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்ய மானியம்

மீன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்ய உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வேந்தோணி பகுதியைச் சோ்ந்த ராமு மகன்... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாத வணிகா்கள் மீது சட்ட நடவடிக்கை

உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாத வணிகா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட அறிக்கை: உணவு... மேலும் பார்க்க

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வெளியாரியில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பத்தூா் அருகேயுள்ள... மேலும் பார்க்க

மீன்பிடித் திருவிழாவில் ஒருவா் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவின் போது நீரில் மூழ்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டி மட்டிக் கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்ற... மேலும் பார்க்க