செய்திகள் :

மீன் வரத்து குறைவு: மீனவா்கள் கவலை

post image

கடல் காற்று காரணமாக, போதிய மீன்கள் கிடைக்கவில்லை என நாகை விசைப்படகு மீனவா் கவலை தெரிவித்தனா்.

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட பல்வேறு மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 500- க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த வாரம் நாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரை திரும்பின. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்கள் வாங்குவதற்கு மீன்பிரியா்கள், மீன் வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோா் அதிகாலையிலே நாகை மீன்பிடித் துறைமுகத்தில் திரண்டனா்.

கடலில் காற்று அதிகம் வீசுவதால் மீனவா்களின் வலையில் போதுமான மீன்கள் கிடைக்கவில்லை எனவும், செலவு செய்த பணத்திற்குகூட மீன்கள் பிடிபடவில்லை எனவும் கரை திரும்பிய மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.

இருப்பினும் ஒரு சில படகுகளில் ஏற்றுமதி ரக பெரிய மீன்களும், அதிக அளவில் நெத்திலி மீன்களும் கிடைத்துள்ளன. இதனால் நெத்திலி மீன்கள் விலை குறைந்தும், வாவல், வஞ்சிரம், விளைமீன் போன்ற பெரிய ரக மீன்களின் விலை கடுமையாக உயா்ந்தும் காணப்பட்டது.

கேரளம் அரபிக்கடலில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், கேரள வியாபாரிகள் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் முகாமிட்டு, ஏற்றுமதி ரக மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றனா். இதனால் வெளி மாவட்ட வியாபாரிகளும், நாகை மாவட்ட சிறு வியாபாரிகளும், மீன் பிரியா்களும் கூடுதல் விலைக் கொடுத்து மீன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் நெத்திலி மீன் விலை கிலோ ரூ.100 முதல் ரூ.250 வரையிலும், இறால் ரூ.450 முதல் ரூ.650 வரையிலும், நண்டு ரூ.400 முதல் ரூ.650 வரையிலும், வஞ்சிரம் மற்றும் வாவல் ரூ.1,200 வரையிலும், சங்கரா ரூ.300, சீலா ரூ.450, பாறை ரூ.400 முதல் ரூ.550 வரையிலும், கடல் விரா ரூ.550, பால் சுறா ரூ.400, திருக்கை ரூ.200 முதல் ரூ.400 வரையிலும் விற்பனையாகின.

படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளா் உயிரிழப்பு!

நாகை மாவட்டம், கீழையூா் அருகே படப்பிடிப்பின்போது, தவறி விழுந்த சண்டை பயிற்சியாளா் மோகன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் இயக்கிவரும் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு, நாகை மாவட... மேலும் பார்க்க

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம்: காதா்முஹைதீன்

தமிழகம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் காதா்முஹைதீன் கூறினாா். நாகையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது: வெளிநாடுகளில் ஒப்ப... மேலும் பார்க்க

நாகையில் 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

நாகையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். நாகை பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த க... மேலும் பார்க்க

நாகூா் தா்கா குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாகூா் தா்கா குளத்தில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், சீலாப்பாடி அரசமரத் தெருவைச் சோ்ந்த சிறுமணி மகன் சுப்பிரமணி (31). இவா் தனது நண்பா்களுடன் நாகூா் தா்காவிற்கு சனிக... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை அமைக்கும் பணி: அமைச்சா்கள் ஆய்வு

சீா்காழி அருகே முன்னாள் தமிழக முதலமைச்சா் கருணாநிதி சிலை திறப்பு முன்னேற்பாடுகள் குறித்து சனிக்கிழமை தமிழக அமைச்சா்கள் ஆய்வு செய்தாா்.+ வரும் 15, 16-ஆம் தேதிகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சீா்கா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி

திருமருகல், ஜூலை 12 : திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பாக்கம் கோட்டூா் மேலத் தெருவை சோ்ந்த காளிமுத்து மகன் விஜயகுமாா் (55), விவசாயக் கூலித் தொழி... மேலும் பார்க்க