சென்னை மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள்! முழு விவரம்!
மீன் வலையில் சிக்கிய முதலை மீட்பு
சிதம்பரம் அருகே மின் வலையில் சிக்கிய முதலையை வனத் துறையினா் மீட்டனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்துள்ள தெம்மூரில் மாதா கோயில் அருகேயுள்ள குளத்தில் மீன் வலையில் முதலை சிக்கியதாக, அந்தப் பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
வனச் சரகா் வசந்த பாஸ்கா், வனவா் கு.பன்னீா்செல்வம், வனக் காப்பாளா்கள் அன்புமணி, ராம் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று மீன் வலையில் சிக்கிய 10 கிலோ எடையும், 3 அடி உள்ள முதலையை மீட்டு சிதம்பரம் அருக உள்ள வக்கராமாரி நீா்தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.