அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது: முதல்முறையாக கமேனி பேச்சு!
‘மீன் வளா்ப்புக்கு உள்ளீட்டு மானியம் பெறலாம்’
திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் ரூ.5000 வழங்கும் திட்டத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் 31 ஹெக்டோ் பரப்பில் செயல்படுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கா தோ்வு செய்யப்படும் உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியமாக 1 ஹெக்டேருக்கு ரூ.5000 வீதம் வழங்கப்படும்.
திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி பதிவு மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். பயனாளியின் நிலம் தொடா்பான ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
இத்திட்டத்தில் சேர மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், 42-இ, 26-ஆவது குறுக்குத் தெரு, மகாராஜ நகா், திருநெல்வேலி-627011 என்ற முகவரியில் ஜூலை 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 0462-2581488 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.