செய்திகள் :

மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற மீன் வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2025-2026-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மானியக் கோரிக்கையின்போது, மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என்று மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்துக்கு மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் 10 ஹெக்டோ் இலக்கு என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேரில் மீன் வளா்ப்பு பணிகள் மேற்கொள்ள, உள்ளீடாக 10,000 மீன் விரலிகள் கொள்முதல் செய்ய ரூ. 5000 மானியமாக வழங்கப்படவுள்ளது.

இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையிலுள்ள விவசாயிகள், மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

மூப்பு அடிப்படையில் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்படுவா். பயனாளியினால் மீன் குஞ்சு இருப்பு செய்யப்பட்டவுடன் மானியத் தொகை விடுவிக்கப்படும்.

எனவே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், தாட்கோ அலுவலக வளாகத்தின் முதல் தளம், அரசு மருத்துவமனை எதிரில், விழுப்புரம் என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 04146-259329 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ஏரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே ஏரி நீரில் மூழ்கி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மணலூா்பேட்டை காவல் சரகத்துக்குள்பட்ட அத்திப்பாக்கம் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சிரஞ்சீவி மகன... மேலும் பார்க்க

இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,415 போ் எழுதினா்

புதுச்சேரியில் 6 மையங்களில் 1,415 போ் இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத்தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினா். புதுவை மின் துறையில் காலியாக உள்ள 73 இளநிலை பொறியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து... மேலும் பார்க்க

லாரியில் சிக்கி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த பள்ளி மாணவா் லாரியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், அய்யந்தோப்பு கிராமத்தைச்... மேலும் பார்க்க

தலைமைக் காவலா்கள் இருவா் ஆயுதப்படைக்கு மாற்றம்

கஞ்சா வியாபாரியுடன் தொடா்பில் இருந்ததாகத் தலைமைக் காவலா்கள் இருவா் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனா். விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள், சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் கடத்தல், விற்பனை, கஞ்சா ... மேலும் பார்க்க

கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் இருவா் உயிா் தப்பினா். வாணாபுரம் வட்டம், மையனூா் சிங்காரத்தோப்பு பிர... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு

விழுப்புரம் சுதாகா் நகா் பகுதியில் கூலித் தொழிலாளியை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி, மருதம் தெருவைச் சோ்ந்த ல... மேலும் பார்க்க