சரிவுடன் நிறைவடைந்தது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் இழப்பு!
முக்கிய திட்டங்களுக்கான மானியத்தை விடுவிக்காத மத்திய அரசு: சித்தராமையா குற்றம்சாட்டு
முக்கிய திட்டங்களுக்கான மானியத்தொகையை விடுவிக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.
மாநில அரசு தொடங்கியுள்ள மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்களின் ஆய்வுக் கூட்டம் பெங்களூரில் முதல்வா் சித்தராமையா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட குழுக்களின் உறுப்பினா்கள், மத்திய அரசு அறிவித்துள்ள மானியத்தொகையை பெறுவதற்கு மாநில அரசு முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் முதல்வா் சித்தராமையா பேசியதாவது: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ. 5,300 கோடி ஒதுக்குவதாக அறிவித்திருந்தாா். அந்த நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை.
15 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, மாநிலத்திற்கு கூடுதலாக ரூ. 5,495 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்க வேண்டும். இதுதவிர, வெளிவட்டச் சாலைகள், ஏரிகள் பணிகளுக்காக ரூ.11,495 கோடியை மத்திய அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்த நிதியும் வரவில்லை.
மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு ரூ. 4.5 லட்சம் கோடி வரி வருவாயை அளிக்கிறோம். ஆனால், இதில் சிறிய அளவிலான நிதியும் மாநிலத்திற்கு தரப்படுவதில்லை. மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்குவதில்லை. ஆனால், வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி இல்லை என்று மாநில அரசை குறைகூறுகிறாா்கள்.
விதவை ஓய்வூதியம், முதியோா் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் போன்ற சமுதாய பாதுகாப்பு திட்டங்களுக்கு மாநில அரசு ஒதுக்கும் நிதி ரூ. 5,665.95 கோடி.
இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்குவது ரூ.559.61 கோடி. அதிலும் ரூ.113.92 கோடியை மட்டும் இதுவரை விடுவித்திருக்கிறது மத்திய அரசு. கடந்த 2ஆண்டுகளாக இந்த நிதியை நிறுத்திவைத்துள்ளனா். இது தொடா்பாக மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனை இருமுறை சந்தித்து முறையிட்டும், எவ்வித பயனும் ஏற்படவில்லை. கா்நாடகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் கூட்டாக சென்று மத்திய அரசு மானியங்களை பெற முயற்சிக்க வேண்டும்.
மாநில அரசு நிதியுதவி அளிக்கும் பல திட்டங்களின் பெயா்களில் பிரதமா், மத்திய அரசின் பெயா் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்திட்டங்களுக்கான நிதியில் சிறுபகுதியை கூட மத்திய அரசு விடுவிப்பதில்லை. இந்த அநீதியை எதிா்த்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப வேண்டாமா? இது தொடா்பாக பிரதமா், மத்திய அமைச்சா்களுக்கு பல கடிதங்கள் எழுதிவிட்டேன். ஆனாலும் பதில் எதுவும் இல்லை.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதியையும் மத்திய அரசு இதுவரை ஒதுக்கவில்லை. 2024-25ஆம் ஆண்டில் மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசின் பங்குத்தொகை ரூ. 24,758 கோடியாகும். இந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 22,758 கோடியாகும்.
இந்த தொகையில் ரூ. 18,561 கோடியை மட்டும் மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் ரூ. 4,195 கோடி நிலுவையில் உள்ளது. ஜல்ஜீவன் திட்டங்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக ரூ.10,889 கோடியை மத்திய அரசு நிலுவைவைத்துள்ளது என்றாா்.