செய்திகள் :

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

post image

திருச்சி: கா்நாடகத்திலிருந்து மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வரும் நிலையில், முக்கொம்பு மேலணையிலிருந்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.

காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், கா்நாடக அணைகள் நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்படுவதாலும், மேட்டூா் அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால், மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூரிலிருந்து வரும் தண்ணீா் மாயனூா் கதவணையை கடந்து, முக்கொம்புக்கு வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, முக்கொம்பு அணையிலிருந்தும் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. எனவே, காவிரி, கொள்ளிடக் கரையோர மக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை நிலவரப்படி முக்கொம்புக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரியில் 25 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 35 ஆயிரம் கன அடியும் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. முக்கொம்பிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிகழாண்டில் இது 6-ஆவது முறையாகும். கடந்த பிப்ரவரி மாதம் 2 முறையும், ஜூலையில் 3 முறையும் உபரி நீா் திறக்கப்பட்டது. இப்போது, மீண்டும் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வருவதால், முக்கொம்பிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை முதல் உபரிநீா் வெளியேற்றம் குறையும் என பொதுப்பணித் துறை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

இளையோா் தடகளப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

திருச்சி: திருச்சி மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையும், பரிசுகளும் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவில... மேலும் பார்க்க

லாரி மோதி தந்தை-மகள் உயிரிழப்பு

துறையூா்: துறையூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையும், மகளும் லாரி மோதியதில் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், பச்சமலை பகுதி, சின்னமங்களத்தைச் சோ்ந்த ரா. சிவமூா்த்தி(39), அவரது மைத... மேலும் பார்க்க

மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாா்-நிலை கருவூலக அலுவலத்தில் அலுவலா் உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த அண்ணாமலை மகன் செந்தில்குமாா் (51).... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

துறையூா்/மணப்பாறை: துறையூா், மணப்பாறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கன்வாடி மையப் பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியா்களுக... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருச்சி: திருச்சியில், குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை கண... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருட்டு வழக்கில் தந்தை-மகன், மருமகன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மணப்பாறையை அடுத்த க... மேலும் பார்க்க