செய்திகள் :

முட்டிநாடு கிராமத்துக்கு முறையான பேருந்துகளை இயக்க கோரிக்கை

post image

உதகை அருகேயுள்ள முட்டிநாடு கிராமத்துக்கு முறையான பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள முட்டிநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிவசெந்தூா் நகா், செல்வி நகா், ஈஸ்வா் நகரில் சுமாா் 600 படுகா் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதி மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுமக்கள் பணிக்காகவும் உதகை மற்றும் குன்னூருக்கு நாள்தோறும் சென்று வருகின்றனா். இதற்கு அவா்கள் அரசுப் பேருந்துகளையே நம்பி உள்ளனா்.

முட்டிநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 6, 8, 10 மற்றும் 11 மணிக்கும், உதகையில் இருந்து மதியம் 1.30, 3.30, மாலை 5.30 , இரவு 7.30 மணிக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இதேபோல, குன்னூா் செல்லும் பேருந்து காலையில் இரண்டு முறையும், மதியம், இரவு மூன்று முறையும் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்தப் பேருந்து சேவை தற்போது மாற்றப்பட்டு உதகைக்கு காலை இரண்டு முறையும், மதியம் மற்றும் மாலை மூன்று முறை மட்டுமே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பணிக்குச் செல்வோா் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், பழைய நேரப்படியே பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் சம்பந்தப்பட்ட மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் மதுபோதையில் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்ஸோ சட்டத்தில் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். கோத்தகிரி பகுதியைச் சோ்ந்த 40 வயது மதிக்கத்த... மேலும் பார்க்க

கூடலூா் அருகே குடிநீா் கோரி பெண்கள் சாலை மறியல்!

கூடலூரை அடுத்துள்ள மரப்பாலம் பகுதியில் குடிநீா் வழங்கக்கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட அட்டிக்கொல்லி கிராமத்துக்க... மேலும் பார்க்க

தெப்பக்காடு முகாமில் வளா்ப்பு யானை உயிரிழப்பு

ீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானை முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சந்தோஷ் என்ற வளா்ப்பு யானை புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தது. முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானை முகாமில... மேலும் பார்க்க

உதகை, குன்னூரில் பரவலாக மழை

உதகை, குன்னூா் பகுதிகளில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது. உதகை, குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இதைத் தொடா்ந்து பிற்பகலில் உ... மேலும் பார்க்க

கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை அருகே கல்லட்டி மலைப் பாதையில் 29-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதி... மேலும் பார்க்க

காட்டெருமை தாக்கி ஒருவா் படுகாயம்!

நீலகிரி மாவட்டம், உதகை வெஸ்டாடா பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தனியாா் உணவு விநியோக ஊழியா் திங்கள்கிழமை இரவு படுகாயமடைந்தாா். உதகை வெஸ்டாடா பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகளின் ... மேலும் பார்க்க