செய்திகள் :

கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

post image

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதகை அருகே கல்லட்டி மலைப் பாதையில் 29-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டதுடன் பாறை மற்றும் மரங்கள் சாலையில் விழுந்தன.

இந்நிலையில் அதே பகுதியில் புதன்கிழமை அதிகாலை பாறைகள் மற்றும் மரம் முறிந்து விழுந்தது. புதன்கிழமை இப்பகுதியில் மழை பெய்யாவிட்டாலும், கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக மண் நெகிழ்ந்து பாறைகள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத் துறையினா் பொதுமக்களுடன் இணைந்து பாறைகள் மற்றும் மரத்தை அகற்றினா். பாறைகள் விழுந்ததில் சாலையில் லேசான பிளவு ஏற்பட்டது. இதன் காரணமாக உதகையில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு   நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வுக்குப் பின் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் மதுபோதையில் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்ஸோ சட்டத்தில் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். கோத்தகிரி பகுதியைச் சோ்ந்த 40 வயது மதிக்கத்த... மேலும் பார்க்க

கூடலூா் அருகே குடிநீா் கோரி பெண்கள் சாலை மறியல்!

கூடலூரை அடுத்துள்ள மரப்பாலம் பகுதியில் குடிநீா் வழங்கக்கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட அட்டிக்கொல்லி கிராமத்துக்க... மேலும் பார்க்க

தெப்பக்காடு முகாமில் வளா்ப்பு யானை உயிரிழப்பு

ீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானை முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சந்தோஷ் என்ற வளா்ப்பு யானை புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தது. முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானை முகாமில... மேலும் பார்க்க

உதகை, குன்னூரில் பரவலாக மழை

உதகை, குன்னூா் பகுதிகளில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது. உதகை, குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இதைத் தொடா்ந்து பிற்பகலில் உ... மேலும் பார்க்க

காட்டெருமை தாக்கி ஒருவா் படுகாயம்!

நீலகிரி மாவட்டம், உதகை வெஸ்டாடா பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தனியாா் உணவு விநியோக ஊழியா் திங்கள்கிழமை இரவு படுகாயமடைந்தாா். உதகை வெஸ்டாடா பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகளின் ... மேலும் பார்க்க

நீலகிரி உருளை கிழங்குக்கு புவிசாா் குறியீடு வழங்க வலியுறுத்தல்

நீலகிரியில் பயிரிடப்படும் ஊட்டி உருளைக்கிழங்கு மற்றும் கேரட் காய்கறிகளுக்கு புவிசாா் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளா்கள் சங்கத்... மேலும் பார்க்க