செய்திகள் :

முதல்முறை வெளிநாடு பயணம் செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

post image

பாகிஸ்தானில் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் அந்நாட்டு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, குஜராத், சியால்கோட், மண்டி, பஹாவுத்தீன் மற்றும் ஜேலும் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக 35 வயது மதிக்கத்தக்க பயணிகள் அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஃபெடரல் விசாரணை ஆணையம் விதித்துள்ள இந்த கட்டுப்பாடுகளின் அடிப்படையில், அந்நாட்டிலிருந்து சவுதி அரேபியா, ஈரான், ஈராக், துருக்கி, கத்தார், அஜர்பைஜான், குவைத், கிர்கிஸ்தான், ரஷியா, எகிப்து, லிபியா, எத்தியோபியா, செனீகல், மௌரிடியானா மற்றும் கெனியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நபர்களின் மீது கடுமையான விபரக் குறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், விமான நிலையங்களில் அதிகாரிகள் பயணிகளின் ஆவணங்களை முழுமையாக சரிபார்த்து, அவர்களின் பயண நோக்கங்கள் மற்றும் நிதி ஏற்பாடுகளை உறுதிப்படுத்த நேர்காணல்களை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்! முகத்தில் உருவான ஓட்டை!

இந்நிலையில், உம்ராவுக்காக (புனித யாத்திரை) சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்ய மறுக்கப்பட்ட ஒரு பக்தரின் மனு தொடர்பாக லாகூர் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, பயணிகள் தெளிவான பயண நோக்கம், உறுதிப்படுத்தப்பட்ட ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் போதுமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அந்த ஆணையம் கூறியுள்ளது. மேலும், உம்ராவுக்காக பயணம் செய்பவர்கள் போதுமான மத புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த சில காலமாக லிபியா, தெற்கு கிரீஸ், மொராக்கோ ஆகிய நாடுகளில் ஏற்பட்ட அகதிகளின் படகு விபத்துகளில், உம்ரா செய்வதாகக் கூறி வெளிநாடுகளுக்கு சென்ற பாகிஸ்தானியர்கள் பயணித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக பாகிஸ்தானிலிருந்து வெளிநாடுகளில் குடியேறுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சட்டவிரோதமாக குடியேறுவதற்கு பாகிஸ்தானிலிருந்து 15 நாடுகளின் வழியாகதான் பெரும்பாலானோர் பயணிப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்! முகத்தில் உருவான ஓட்டை!

அமெரிக்காவில் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான பெண்ணின் முகத்தில் ஓட்டை உருவாகி அவருக்கு தற்போது 15க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இலினொயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஃபோஸ்டர் மொஹாலே கூற... மேலும் பார்க்க

மசூதியில் குண்டு வெடிப்பு: தலைமை இமாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்குவாவின் மொந்ஷேரா மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அம்பலா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (மார்ச்.1) வழக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆஜராகியுள்ளார். அப்போது... மேலும் பார்க்க

அசாம்: ரூ.2.2 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.சாச்சார் மாவட்டத்தில... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலியுறுத்தல்!

மொராக்கோவில் பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியான சூழ... மேலும் பார்க்க