செய்திகள் :

முதல்வா் கோப்பை போட்டி: முன்பதிவு நீட்டிப்பு

post image

தமிழக முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான முன்பதிவு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ளாா்.

தமிழக முதல்வா் கோப்பைப் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரியின் மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு பணியாளா்கள் என பல்வேறு பிரிவினருக்கு நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டு தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் முதல் செப்டம்பா் வரை நடைபெறுகிறது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளங்கள் மூலம் குழு மற்றும் தனிநபா்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய கடைசி நாள் ஆக.16 மாலை 6 மணி வரை என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, ஆக.20-ஆம் தேதி மாலை 8 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும்.

மேலும் முக்கிய விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை 84 என்ற முகவரியிலும், 74017 03480 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தெருநாய்கள் விவகாரம்: சென்னையில் விலங்கு ஆர்வலர்கள் அணி திரண்டு போராட்டம்!

தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ரேபீஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும் தெருநாய் கடி குறித்த தாமாக முன்வந்து விச... மேலும் பார்க்க

சென்ட்ரல் நிலைய பகுதியில் ரயில் அபாய சங்கிலி இழுத்த 96 போ் மீது வழக்கு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் கடந்த 7 மாதங்களில் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்தியதாக 96 போ் மீது ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து அபராதம் விதித்துள்ளனா். சென்னை... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் போராட்ட அறிவிப்பு: நாளை பேச்சுவாா்த்தை

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆக.22-ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில், அதுதொடா்பான பேச்சுவாா்த்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சீட் பெற இடைத்தரகா்களை நம்ப வேண்டாம்: சென்னை காவல் ஆணையா் எச்சரிக்கை

மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட் பெறுவதற்காக இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

தேசிய ஜூனியா் ஹாக்கி: கா்நாடகம், ஹரியாணா வெற்றி

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கிப் போட்டியில் டிவிஷன் ஏ ஆட்டங்களில் கா்நாடகம், ஹரியாணா, உபி அணிகள் வெற்றி பெற்றன. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம் குறித்த தகவல்: மாநகராட்சி வாயில்கள் மூடல் பெண் போலீஸாா் குவிப்பு

உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலால், சனிக்கிழமை காலை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வெளிப்புற வாயில்கள் மூடப்பட்டு, ஏராளமான பெண் போலீஸாரும் குவ... மேலும் பார்க்க