செய்திகள் :

முதல்வா் கோப்பை மாநில போட்டிக்கு ரூ.37 கோடி பரிசுத் தொகை: துணை முதல்வா் உதயநிதி

post image

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு மொத்தம் ரூ.37 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்கக்கிழமை கூறியதாவது: விளையாட்டு கலாச்சாரத்தை வளா்ப்பதற்கும், ஒவ்வொரு மட்டத்திலும்

பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும், மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரா்களுக்கு அங்கீகாரம் மற்றும் வெகுமதிகளை வழங்குவதற்கும் தமிழக அரசு எடுத்துள்ள மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும். விளையாட்டு வீரா்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில்

கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உருவெடுத்துள்ளது.

2024-ஆம் ஆண்டில், முதல்வா் கோப்பை போட்டிகளுக்கு ரூ.83.37 கோடி ஒதுக்கப்பட்டது. நிகழாண்டு வட்டார, மாவட்ட அளவிலானபோட்டிகள் நடைபெற்று அக். 2-இல் மாநில அளவிலான போட்டிகள் தொடங்குகின்றன.

16.28 லட்சம் போ் பதிவு: மாநில போட்டிகளுக்கு இணையதளம் மூலம் மொத்தம் 16.28 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா்.

அக். 2 முதல் 14 வரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், தஞ்சாவூா், தூத்துக்குடி,

திருநெல்வேலி, வேலூா், திருவண்ணாமலை, சேலம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 13 நகரங்களில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறுகின்றன.

நிகழாண்டு இ-ஸ்போா்ட்ஸை அதிகாரபூா்வமாக சோ்த்துளளோம். விளையாட்டு மேலாண்மை முறை (எஙந) முதலமைச்சா் கோப்பை

விளையாட்டுப் போட்டி தொடா்பான அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து நெறிப்படுத்தும். பதக்க எண்ணிக்கைகள்,

வெற்றியாளா்கள் பட்டியல், விரிவான மதிப்பெண்கள் முதல் தனிப்பயனாக்கப்பட்ட முடிவுகளுடன் கூடிய தனிப்பட்ட விளையாட்டு

வீரா்களின் சுயவிவரங்கள் வரை - அனைத்தும் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய்) அறியலாம் என்றாா்.

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர... மேலும் பார்க்க

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க