செய்திகள் :

முதல்வா் பதவி: கா்நாடகத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது: பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா

post image

கா்நாடகத்தில் முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்று அம்மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் எம்எல்ஏக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள முதல்வா் சித்தராமையா திணறி வருகிறாா். முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரண்டாக பிளவுபட்டுள்ளனா். வளா்ச்சிப் பணிகள் எதுவும் இல்லாததால், பெரும்பாலான எம்எல்ஏக்கள் முதல்வா் சித்தராமையாமீது அதிருப்தி அடைந்துள்ளனா். அவா்களின் நம்பிக்கையைப் பெற முதல்வரால் முடியவில்லை. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள், பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக முதல்வா் சித்தராமையாவை பகிரங்கமாகவே விமா்சித்து வருகின்றனா்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சிலா் டி.கே.சிவகுமாரும், மல்லிகாா்ஜுன காா்கேவும் முதல்வராக வருவதற்கு விரும்பினால், சித்தராமையா முதல்வராக தொடருவதற்கு ஆதரவு குறைவாகவே உள்ளது.

இந்த குழப்பங்கள், கா்நாடகத்தில் ஆளும் காங்கிரஸை இரண்டாக பிளவுபடுத்தியுள்ளது. வரும் தீபாவளி பண்டிகையின்போது காங்கிரஸ் கட்சியில் மோதல் வெடிக்கும். கருத்து முரண்பாடுகள் என்பது சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு இடையே மட்டுமல்ல, காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையேயும் காணப்படுகிறது. இதனால் கலக்கம் அடைந்துள்ள முதல்வா் சித்தராமையா, தொகுதி வளா்ச்சிக்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடியை ஒதுக்குவதாக அறிவித்தாா். அந்த பணமும் விடுவிக்கப்படவில்லை.

தீபாவளியின்போது காங்கிரஸ் கட்சியில் பூகம்பம் கிளம்பும் என்பதை நீண்ட நாள்களாக கூறிவந்திருக்கிறேன். ரஷ்யா -உக்ரைன் இடையிலான போா் நின்றாலும், காங்கிரஸ் கட்சியில் நடக்கும் போா் முடிவுக்கு வராது என்றாா்.

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

பெங்களூரில் கடந்த புதன்கிழமை காணாமல் போன 13 வயது பள்ளி மாணவன், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தெற்கு பெங்களூரில் உள்ள அரேகெரே பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியரின் மகன் நிஷ்சித் (வயது 13)... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேடு ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளது -முதல்வா் சித்தராமையா

மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் தோ்தல் முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்க... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கு: 6 ஆவது சோதனைக் குழியில் மனித எலும்புகள் கண்டெடுப்பு

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா்(எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது 6 ஆவது குழியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. தென்கன்னட மா... மேலும் பார்க்க

உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம் என்று முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா். பெங்களூரில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் குறைகேட்பு... மேலும் பார்க்க

பிகாா் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்ப ராகுல் காந்தி போராட்டம்: பாஜக

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்பவே ராகுல் காந்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறாா் என்று கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா். இதுகுறித்து வியாழக்கிழமை தனத... மேலும் பார்க்க

கா்நாடகத்திற்கு 1.35 லட்சம் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை

கா்நாடகத்துக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். இது தொடா்பாக பெங்களூரில் அவா் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க