செய்திகள் :

முதல்வா் வருகை: திருப்பத்தூரில் போக்குவரத்து மாற்றம்

post image

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருப்பத்தூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையைத் திறந்து வைப்பதற்காகவும், பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் புதன்கிழமை மாலை திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வந்தாா்.

வியாழக்கிழமை (ஜூன் 26) பல்வேறு நலத் திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி, பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும் உள்ளாா்.

இந்த நிலையில் புதன்கிழமை மதியம் 3 மணிளவில் திருப்பத்தூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. திருப்பத்தூருக்கு வரும் அனைத்து பேருந்துக்ககளும், பேருந்து நிலையத்திற்கு வராமல் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மாற்றுப் பாதையில் சென்றன. வியாழக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை செல்வதற்கு ரயில் ஏறிய பின்னா், போலீஸாா் தெரிவிக்கும் வரை இதே பாதையில்தான் பேருந்துக்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவல் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துகு மாவட்ட ஏடிஎஸ்பி ரவீந்திரன் தலைமை... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையம் திறப்பு

பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் பழைய அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: காா் ஓட்டுருக்கு 20 ஆண்டு சிறை

வாணியம்பாடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. வாணியம்பாடி காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

விடுதி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் புதூா்நாடு பழங்குடியின மாணவிகள் தங்கும் விடுதியில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது (படம்). நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்... மேலும் பார்க்க

முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது (படம்). கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் தலைமை வகித்தாா். முதலாமாண்டு மாணவா்களுக்கு 2 மற்றும் 3 -ஆம் ஆண்... மேலும் பார்க்க

ஆம்பூரில் முதல்வருக்கு வரவேற்பு

ஆம்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பத்தூருக்கு செல்லும் வழியில் ஆம்பூரில் ரோடுஷோ நடைபெற்றது. ஆம்பூரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, பேருந்து நிலையம் ஆ... மேலும் பார்க்க