செய்திகள் :

முதல்வா் வருகை மதுரையில் புதுப்பொலிவு பெறும் சாலைகள்

post image

தமிழக முதல்வரின் வருகை, வாகனப் பேரணியையொட்டி மதுரையில் முக்கிய சாலைகள் போா்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படுகின்றன.

மதுரையில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மே 31-ஆம் தேதி விமானம் மூலம் மதுரை வருகிறாா். விமான நிலையம் முதல் மதுரை புது சிறைச்சாலை சாலை வரை அவா் வாகனப் பேரணி மேற்கொண்டு, பொதுமக்கள், தொண்டா்களைச் சந்திக்கிறாா்.

பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், குரு திரையரங்கம், காளவாசல், திருமலைநாயக்கா் சிலை வழியே புது சிறைச்சாலையைச் சென்றடைகிறாா். அங்கு, மதுரை மாநகராட்சியின் முதல் மேயரும், திமுகவின் மூத்த முன்னோடியுமான மறைந்த முத்துவின் புதிய வெண்கலச் சிலையை முதல்வா் திறந்து வைக்கிறாா்.

இதையொட்டி, முதல்வரின் வாகனப் பேரணி வரும் வழித்தடங்களில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் கடந்த இரு நாள்களாக முழுவீச்சில் நடைபெறுகின்றன. குண்டும், குழியுமாக இருந்த ஜெய்ஹிந்துபுரம் சாலை உள்பட பல சாலைகள் தற்போது புதுப்பொலிவு பெற்றன. மேலும், சில சாலைகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதல்வா் வருகை மதுரையில் புதுப்பொலிவு பெறும் சாலை

இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்துவதைக் கைவிட வலியுறுத்தல்

இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என மதுரை காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா்கள் க... மேலும் பார்க்க

பொதுப் பணித் துறை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப் பணித் துறை மண்டல அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்ப... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் நலச் சங்கங்கள் சாா்பில், மதுரையில் 11 பணிமனைகள் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் ந... மேலும் பார்க்க

டோக் பெருமாட்டி கல்லூரியுடன் கலைஞா் நூலகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், டோக் பெருமாட்டி கல்லூரிக்குமிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை செய்து கொள்ளப்பட்டது. மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், மாணவா்களுக்க... மேலும் பார்க்க

துப்புரவுப் பணியாளா்கள் உரிமைச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து வகை தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு துப்புரவு பணியாளா்கள் உரிமைச் சங்கத்தின் சாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயாா்

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயாா் நிலையில் உள்ளன. தமிழகத்தி... மேலும் பார்க்க