செய்திகள் :

முதல் டி20: பிரையன் பென்னட் அரைசதம்; இலங்கைக்கு 176 ரன்கள் இலக்கு!

post image

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி முழுமையாக கைப்பற்றிவிட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 3) டி20 தொடர் தொடங்கியது.

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 57 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, சிக்கந்தர் ராஸா 28 ரன்களும், ரியான் பர்ல் 17 ரன்களும் எடுத்தனர். சீன் வில்லியம்ஸ் 14 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நுவான் துஷாரா, மஹீஷ் தீக்‌ஷனா மற்றும் துஷான் ஹேமந்தா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.

Zimbabwe, who batted first in the first T20I against Sri Lanka, scored 175 runs for the loss of 7 wickets.

இதையும் படிக்க: ஆஷஸ் தொடருக்காக ரிஸ்க் எடுக்கத் தயார்: பாட் கம்மின்ஸ்

தொடர் தோல்விகளால் திணறும் இங்கிலாந்து! 2027 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல்!

இங்கிலாந்து அணியின் தொடர் தோல்விகளால் 2027 உலகக் கோப்பைக்கு தகுதிபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியி... மேலும் பார்க்க

ஓய்விலிருந்து மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் பிரபல நியூசி. வீரர்!

ஓய்வு முடிவிலிருந்து வெளிவந்து பிரபல நியூசிலாந்து வீரர் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார்.நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் கடந்த 2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிரு... மேலும் பார்க்க

ஆஸி. மகளிரணி அறிவிப்பு: 8-ஆவது உலகக் கோப்பையை வெல்லுமா?

மகளிர் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் நடைபெற இருக்கும் ஒருநாள் மகளிர் உலகக் கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.ஒருநாள் மகளிர் உ... மேலும் பார்க்க

5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது தெ.ஆ.!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தெ.ஆ. அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என தொடரை வென்றுள்ள... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவ... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஸார்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில்... மேலும் பார்க்க