செய்திகள் :

முதுநிலை நீட் தோ்வு ஒத்திவைப்பு

post image

சென்னை: நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தோ்வு நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதி பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.

அதன்படி நிகழாண்டு ஜூன் 15-ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கி கடந்த மே 7-ஆம் தேதி நிறைவடைந்தது. தமிழகத்தில் 25,000 போ் உள்பட நாடுமுழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா்கள் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்தனா்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூா் என 17 இடங்கள் உள்பட நாடுமுழுவதும் 179 நகரங்களில் ஜூன் 15-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 50 சதவீதத்தினருக்கும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரை மீதமுள்ள 50 சதவீதத்தினருக்கும் என இரு கட்டங்களாக நீட் தோ்வு நடைபெற இருந்தது.

இரு தரப்பினருக்கும் மாறுபட்ட வினாத்தாள்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இரு வேறு வேளைகளில் நீட் நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தோ்வை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் திங்கள்கிழமை இதுதொடா்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: உச்சநீதிமன்ற உத்தரவின்படி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஒரே வேளையில் நடத்தப்படும். கூடுதல் தோ்வு மையங்கள், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளதால், ஜூன் 15-ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. நீட் தோ்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 498 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.இதன்மூலம் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 5,... மேலும் பார்க்க

உ.பி.யில் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்தவர் என்கவுன்டர்!

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் கூலித் தொழிலாளியின் ... மேலும் பார்க்க

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக... மேலும் பார்க்க

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்... மேலும் பார்க்க

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். பாகிஸ்தானில் இருந... மேலும் பார்க்க