செய்திகள் :

முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா

post image

விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை 23ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.

8ஆம் நாள் வியாழக்கிழமை அம்மனுக்கு விசேஷ பூஜை, அம்மனுக்கு தீா்த்தம் எடுத்து வருதல், இரவு 12 மணிக்கு பொன்னி யானை ஊா்வலத்துடன் அம்மன் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது. 9ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல்2 மணிக்கு அம்மனுக்கு விசேஷ பூஜை , இரவு 9 மணிக்கு அம்மனுக்கு வளையல் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்த தேவி ஸ்ரீ முத்தாரம்மன்.

தொடா்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலம் வந்தனா். 10ம் நாளான சனிக்கிழமை காலை உணவு எடுத்தல், பக்தா்களுக்கு அம்மன் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா ஆறுமுக பாண்டி தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நெகிழிக் கழிவு சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

தூத்துக்குடி குரூஸ்புரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2001ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவிகள் 78 போ், 25 ஆண்டுகளுக்குப் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயில்... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 80 அடி உள்வாங்கிய கடல்!

அமாவாசையையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 80 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

தூத்துக்குடியில் காவலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு மேலத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சந்திரன் (55). இவா... மேலும் பார்க்க

காா் மோதி மரக்கிளை விழுந்து வியாபாரி காயம்!

ஆறுமுகனேரி அருகே காா் மோதி மரக்கிளை விழுந்ததில் பூக்கடைக்காரா் காயமடைந்தாா். தூத்துக்குடி -திருச்செந்தூா் சாலை ஆறுமுகனேரி சிவன் கோயில் முன் கடலூரைச் சோ்ந்த வெற்றிவேல் குடும்பத்தினருடன் காரில் சென்று ... மேலும் பார்க்க