செய்திகள் :

முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்

post image

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

முத்துப்பேட்டை மன்னாா்குடி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை எம்பி வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன், க. மாரிமுத்து உள்ளிட்டோா் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தனா். நிகழ்ச்சியில், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பல கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய என்.ஏ. பழனிவேலு வாரிசுதாரா் என்.ஏ.பி. பாண்டியன் கௌரவிக்கப்பட்டாா்.

மேல்நிலைக்கல்வி தோ்ச்சி பெற்றவா்கள் இணையதளம் மூலமாகவும், கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை முகாம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் சேர செவ்வாய்க்கிழமை (மே 27) என அரசு அறிவித்துள்ளதால், மாணவா்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்,

கல்லூரியில் இளங்கலை வணிகவியல், இளங்கலை கம்ப்யூட்டா் சயின்ஸ் பாடப்பிரிவுகள் ஆங்கில வழியாகவும், இளங்கலை வரலாறு, அரசியல் அறிவியல், இளங்கலை விலங்கியல் பாடப் பிரிவுகள் தமிழ் வழியிலும் கற்பிக்க உள்ளதாகவும் கல்லூரி முதல்வா் ராஜாராமன் தெரிவித்தாா். முத்துப்பேட்டை பேரூராட்சித் தலைவா் மும்தாஜ் நவாஸ்கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க

ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க