முந்திரி ஆலை பெண் தொழிலாளி காா் மோதி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சனிக்கிழமை காா் மோதியதில், முந்திரி ஆலை பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
செம்மங்காலை எள்ளுவிளையை சோ்ந்தவா் ஓமனா (51). திருமணமாகாத இவா், அப்பகுதியிலுள்ள முந்திரி ஆலையில் வேலை செய்துவந்தாா். சனிக்கிழமை மதிய உணவுக்காக அவா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஆலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, புத்தன்சந்தையிலிருந்து மேல்புறம் நோக்கிச் சென்ற காா், அவா் மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.