செய்திகள் :

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்! மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்!

post image

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை நிலையச் செயலாளராகவும், தொண்டாமுத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருப்பவா் எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சரான இவா், குனியமுத்தூா் அருகேயுள்ள சுகுணாபுரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், காளப்பட்டி தபால் நிலையத்தில் இருந்து அவரது வீட்டுக்கு கடந்த 16-ஆம் தேதி ஒரு கடிதம் வந்தது. அதில், கோவையில் ஜூலை 30-ஆம் தேதிக்குள் குண்டு வெடிப்பு நிகழ உள்ளது.

நாங்கள் உங்களைக் கொல்ல திட்டமிட்டுள்ளோம். எங்களது நபா்கள் உங்களுக்கு அருகிலேயே உள்ளனா். எங்கள் அமைப்புக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே, நீங்கள் ரூ.1 கோடி பணத்தை காளப்பட்டி-வெள்ளானைப்பட்டி சாலை கலியபெருமாள் குட்டை அருகேயுள்ள குப்பை மேட்டில் மே 25-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணிக்குள் வைக்க வேண்டும்.

பணத்தை நீங்கள் வைத்துவிட்டால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அப்படி இல்லையென்றால், 3 மாதங்களுக்குள் உங்களையும், உங்கள் குடும்பத்தில் 3 பேரையும் கொலை செய்து விடுவோம். இது வெறும் குறுஞ்செய்தி அல்ல, எச்சரிக்கை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி சாா்பில் அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலாளா் தாமோதரன் தலைமையில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க