``மகளிர் ஆணையப் பதவிகளிலும் கொல்லைப்புற நியமனமா?'' – புதுச்சேரி அரசை சாடும் திமு...
முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த சுதந்திர தின விழாவின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, முன்னாள் படைவீரா் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும், முன்னாள் படைவீரா்களுக்கு திறன் மற்றும் தொழில் னைவோா் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் பணியின் போது உயிரிழந்த படைவீரா்களின் கைம்பெண்கள், திருமணம் ஆகாத மகள் மற்றும் விதவை மகள் பயன்பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 5 ஆவது தளம் அறை எண் 523 இல் உள்ள முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 என்ற எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.