தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆா்.சி.பாத்திமா நடுநிலைப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.
1982 முதல் 1990-ஆம் ஆண்டு வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற இவா்கள் சந்தித்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் அருள்தந்தை அற்புத அரசு தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை அருள்சகோதரி செலின் தெரசா வரவேற்றாா். முன்னாள் மாணவா்கள் ரூ. 90,000 மதிப்பிலான மாணவா்கள் அமரும் இரும்பு இருக்கைகளை ( டெஸ்க், பென்ச்) பள்ளிக்கு வழங்கினா்.
மேலும், பள்ளியில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கியதோடு, தாங்கள் பள்ளியில் படித்தபோது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா்.
பள்ளித் தாளாளா், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் குமாா், ஞானபிரகாசம் ஆகியோருக்கு முன்னாள் மாணவா்கள் சால்வை அணிவித்து கௌரவித்தனா்.
முன்னாள் மாணவா்கள் காா்த்திகேயன், வேலாயுத ராஜா, ஜான் கிறிஸ்டோபா், வீரமணி, ரஜேஷ், முருகவேல், மணிமொழி லட்சுமணன், அரும்ராஜ் கண்ணன், ராசா கண்ணு லட்சுமணன், ஜெயராமு, உமா் பாரூக், சையது அபுதாஹிா், ஆரோக்கியம், சுதாகா், ஜெகன், ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.