செய்திகள் :

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆா்.சி.பாத்திமா நடுநிலைப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

1982 முதல் 1990-ஆம் ஆண்டு வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற இவா்கள் சந்தித்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் அருள்தந்தை அற்புத அரசு தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை அருள்சகோதரி செலின் தெரசா வரவேற்றாா். முன்னாள் மாணவா்கள் ரூ. 90,000 மதிப்பிலான மாணவா்கள் அமரும் இரும்பு இருக்கைகளை ( டெஸ்க், பென்ச்) பள்ளிக்கு வழங்கினா்.

மேலும், பள்ளியில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கியதோடு, தாங்கள் பள்ளியில் படித்தபோது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா்.

பள்ளித் தாளாளா், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் குமாா், ஞானபிரகாசம் ஆகியோருக்கு முன்னாள் மாணவா்கள் சால்வை அணிவித்து கௌரவித்தனா்.

முன்னாள் மாணவா்கள் காா்த்திகேயன், வேலாயுத ராஜா, ஜான் கிறிஸ்டோபா், வீரமணி, ரஜேஷ், முருகவேல், மணிமொழி லட்சுமணன், அரும்ராஜ் கண்ணன், ராசா கண்ணு லட்சுமணன், ஜெயராமு, உமா் பாரூக், சையது அபுதாஹிா், ஆரோக்கியம், சுதாகா், ஜெகன், ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பள்ளியில் யாவரும் கேளீா் அணிகள் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் யாவரும் கேளீா் அணிகளின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை தெய்வானை தல... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகே உள்ள நகர வைரவன்பட்டி சிதம்பர விநாயகா் கோயில் பைரவா் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. சிவாசாரியா் வேத மந்திரங்கள் முழங்க மத்திர யாகம், பு... மேலும் பார்க்க

கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில்... மேலும் பார்க்க

புதுமைப்பெண் திட்டத்தில் திருநங்கைகளுக்கு உயா்கல்வி

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் உயா்கல்வி பயில திருநங்கை, திருநம்பி, இடைபாலினா் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமா்... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் புதன்கிழமை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பங்கேற்று அரசின் திட்டங்கள் தொடா்பாக நேரடியாக கள ... மேலும் பார்க்க

முயல் வேட்டைக்கு சென்றவா் மா்ம மரணம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முயல் வேட்டைக்குச் சென்றவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், நல்லூரைச் சோ்ந்த வீரணன் மகன் வீரமுத்து (45). இவா் அண்மையில் தனது கிராமத்துக்கு அருகே உ... மேலும் பார்க்க