செய்திகள் :

முன்னாள் ராணுவத்தினருக்கு சட்டப் பணிகள் ஆணைக் குழு அழைப்பு

post image

தேனி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவுடன் இணைந்து தன்னாா்வலா்களாக செயல்பட முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இது குறித்து தேனி மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவுடன் இணைந்து சட்ட விழிப்புணா்வு, சமூக நலன், சட்ட உதவி ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தன்னாா்வலா்களாக செயல்படுவதற்கு முன்னாள் படை வீரா்கள் முன் வரலாம். இந்தப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவ வீரா்கள் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை நேரிலோ, தொலைபேசி எண்: 04546-291566 மூலமாகவோ, அந்தந்த வட்ட நீதிமன்றங்களில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழுவை நேரிலோ தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை தெரிவிக்கலாம்.

மேலும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பட்டியல் வழக்குரைஞராக செயல்படுவதற்கு விருப்பமுள்ள ராணுவ தலைமை சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரா்கள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவைத் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

மானியத்தில் விதைத் தொகுப்பு: விவசாயிகள் பதிவு செய்யலாம்

தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் அரசு மானியத்தில் விதைத் தொகுப்புகள் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊட்டச் ச... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயம்

தேனி மாவட்டம், போடி பள்ளியில் வியாழக்கிழமை தேன் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா். போடி பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்... மேலும் பார்க்க

போடியில் நாளை மின் தடை

போடி பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: போடி துணை மின் நிலையத்தில் ஜூலை 5-ஆம்... மேலும் பார்க்க

தேனி நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரின் அடிப்படையில், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியா... மேலும் பார்க்க

சுருளிப்பட்டியில் வீடு புகுந்து பணம், தங்க நகை திருட்டு

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுேள்ள சுருளிப்பட்டியில் பகலில் வீடு புகுந்து பணம், தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சுருளிப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி அமரன் (53). இவரும், இவரது மனை... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம் வடகரை, சின்னமனூா் கருங்காட்டான்குளம் ஆகிய இடங்களில் நகா்ப்புற நல வாழ்வு மையங்கள் ஆகியவற்றை காணொலி முலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக... மேலும் பார்க்க