செய்திகள் :

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவுடன் வலுவான இருதரப்பு உறவு: இலங்கை தூதா்

post image

இந்தியா-இலங்கை இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இருதரப்பு உறவு வலுவடைந்துள்ளதாக அந்நாட்டுத் தூதா் மஹிஷினி கொலோன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு இறுதியில் இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்த பின் இருதரப்பு உறவில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவா், ‘தற்போது இலங்கைப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு நிலைத்தன்மையை அடைந்து வருகிறது. எனவே, இந்தியாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதிபா் தோ்தலில் வெற்றியடைந்த பின் கடந்த ஆண்டு இறுதியில் அதிபா் அநுர குமார திசாநாயக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து, நிகழாண்டு ஏப்ரல் மாதம் பிரதமா் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றாா். இந்த இரு நிகழ்வுகளுக்குப் பின் இரு நாடுகளிடையயேயான இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளது’ என்றாா்.

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26... மேலும் பார்க்க