செய்திகள் :

முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

post image

மதுபோதையில் திருமண விழாவின்போது ஏற்பட்ட முன்விரோதத்தால், ஒருவரை 3 போ் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா் மற்ற இருவரைத் தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவின்போது, அங்கு வந்த திருக்கட்டளை சாலையிலுள்ள மேலக்கொல்லையைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (36) என்பவருக்கும், திருக்கட்டளைப் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் பிரகாஷ் (23) என்பவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திங்கள்கிழமை பிற்பகலில், ரஞ்சித்குமாா் இரு சக்கர வாகனத்தில் மேலக்கொல்லை பகுதியில் வந்தபோது, பிரகாஷ் மற்றும் இருவா், ரஞ்சித்குமாரை தடுத்து நிறுத்தி, அரிவாளால் வெட்டியுள்ளனா்.

இச்சம்பவத்தில் காயமடைந்த அவா், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தகவலறிந்து வந்த கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஏற்கெனவே குற்றப் பின்னணி கொண்ட பிரகாஷை கைது செய்து மற்ற இருவரைத் தேடி வருகின்றனா்.

நிகழாண்டில் 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு: புதுகை ஆட்சியா் தகவல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டின் காரீப் பருவத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, அவற்றின் மூலம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பொன்னமராவதி வட்டாரத்தில் பரவலாக மழை

பொன்னமராவதி வட்டாரத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் சுட்டெரித்தது. இந்நிலையில் புதன்கிழமை பிற... மேலும் பார்க்க

அனுமதியில்லாத நிறுவனங்களிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்யக் கூடாது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியில்லாத நிறுவனங்களிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி எச்சரிக்கைவிடுத்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கறம்பக்குடி அருகே குடிநீா் வழங்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து நூதனப் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடிநீா் வழங்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து குடிநீா் குழாய், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட... மேலும் பார்க்க

ஆதனப்பட்டியில் திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனப்பட்டியில் சோழா் காலத்தைச் சோ்ந்த திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இலுப்பூா் வட்டம், மருதம்பட்டி ஊராட்சி எல்லைக்குள்பட்ட ஆதனப்பட்டி வ... மேலும் பார்க்க

புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். புதுக்கோட்டை ஒன்றியத்தில் பெ... மேலும் பார்க்க