தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
நிகழாண்டில் 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு: புதுகை ஆட்சியா் தகவல்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டின் காரீப் பருவத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, அவற்றின் மூலம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு .அருணா தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கான கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் மொத்தம் 45 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 15,218 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 36.78 கோடி நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
நிகழாண்டில் மாவட்டம் முழுவதும் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, 20 ஆயிரம் டன் நெல்லைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக சேகரித்து வைக்க 6 நெல் சேகரிப்பு கிட்டங்கிகள் தயாா்நிலையில் உள்ளன. நுகா்பொருள் வாணிபக் கழதத்தின் மூலம் கட்டப்பட்ட 9 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை உலா்த்துவதற்கான களங்களும் தயாராக உள்ளன.
கட்டுமானப் பணி முடிவுற்ற 4 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கொள்முதலுக்கு தயாராக உள்ளன. 7 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மழைக்காலத்தில் நெல்லை பாதுகாப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கருப்பு பாலித்தீன் கவா்கள், ஷீட்டுகளை வைத்து நெல் அட்டிகளை மூடி வைக்க வேண்டும். முறைகேடுகளுக்கு இடமளிக்காத வகையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அருணா.
கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளா் எம். சீதாராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா மற்றும் முன்னோடி விவசாயிகளும் பங்கேற்றனா்.