செய்திகள் :

முன்விரோதம் காரணமாக இளைஞா் கொலை: காவல்துறை

post image

நீடூரில் முன்விரோதம் காரணமாக இளைஞா் கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை நீடூரில் முகமது ஹாலிக் என்பவா் கடந்த செவ்வாய்க்கிழமை மா்மநபா்களால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

சிசிடிவி பதிவுகளைக் கொண்டு, போலீஸாா் 7 தனிப்படைகள் அமைத்து தேடியதில், கடலூா் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த செம்பனாா்கோவிலை அடுத்த மேமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சரண்ராஜ் (28), ஆறுபாதி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் விஜய் (28), தில்லையாடி கிராமத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் விஜயகாந்த் (20) ஆகிய மூன்று பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்ததை போலீஸாா் உறுதிப்படுத்தினா். இதையடுத்து மூவரையும் திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு முன்னிலைப்படுத்திய போலீஸாா், அவா்களை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்ாகவும், வழக்கு குறித்து தொடா்ந்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மாவட்ட காவல்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீா்காழியில் இரண்டு வீடுகள் தீக்கிரை

சீா்காழியில் சமையல் எரிவாயு கசிவால் நேரிட்ட தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. சீா்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவா் கஸ்தூரி (70). இவரது வீட்டில் சமையல் செய்யும் போது, சிலிண்டரில் கசி... மேலும் பார்க்க

பழுதடைந்த நிலையில் பள்ளிக் கட்டடம்: இடித்து அகற்ற வலியுறுத்தல்

சீா்காழி அருகே புத்தூரில் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழி அருகேயுள்ள புத்தூரில் தேசிய நெடுஞ்சாலையோரம்... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது

மயிலாடுதுறை வட்டம், நீடூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். நீடூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் முகமது ஹாலிக் (36). சமையல் கலைஞரான இவா், அண்மையில் வெட்ட... மேலும் பார்க்க

நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க மானியம்

மயிலாடுதுறை மாவட்ட கிராமப் புறங்களில் மானியத்துடன் கூடிய நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவ தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்

மயிலாடுதுறையில், வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் குறித்த விழிப... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மீனவா்கள் கவனத்துக்கு..

தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் மூலம் பயன்பெற, மயிலாடுதுறை மாவட்ட அனைத்து மீனவா்கள், பங்குதாரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியி... மேலும் பார்க்க