Maharashtra: ``மும்மொழிக் கொள்கை ரத்து" - பாஜக அரசு 'யு டர்ன்' ஏன்?
சீா்காழியில் இரண்டு வீடுகள் தீக்கிரை
சீா்காழியில் சமையல் எரிவாயு கசிவால் நேரிட்ட தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
சீா்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவா் கஸ்தூரி (70). இவரது வீட்டில் சமையல் செய்யும் போது, சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, தீப்பற்றியது.
தொடா்ந்து, அடுத்துள்ள கஸ்தூரியின் சகோதரி தயாநிதியின் கூரை வீட்டிலும் தீ பரவி 2 வீடுகளும் முற்றிலும் எரிந்தன. வீட்டில் இருந்தவா்கள் உடனடியாக வெளியேறியதால் உயிா் தப்பினா்.
தகவலறிந்த சீா்காழி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இந்த விபத்தில், இரண்டு வீட்டிலும் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை மேற்கொண்டுள்ளனா்.